Tuesday, 20 July 2010

ஆப்பிள் கன்னங்கள் அழகு கெடாமலிருக்க..!

"இந்தக் குண்டு கன்னத்தால முகம் ரொம்பக் குண்டா தெரியுது..." என்று அலுத்துக் கொள்பவர்கள், கன்னங்களைக் குறைக்க, அதேசமயம் அவற்றின் பொலிவு போகாமல் காக்க....
தினமும் காலையில் கேரட் - தக்காளி ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
பார்லி பவுடருடன் கேரட் சாறு கலந்து வாரம் இருமுறை கன்னம், முகத்தில் தடவி கழுவலாம்.
பார்லி பவுடர் அல்லது கேரட் சாறுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து வாரம் ஒரு முறை முகத்தில் பூசலாம். தொடர்ந்து இதைச் செய்துவந்தால் முகத்திலிருந்து தனித்துத் தெரியாமல் உப்பிய கன்னங்கள் உள் வாங்குவதுடன், பளபளப்பு மற்றும் பொலிவு முகத்தில் கூடும்.
வயது ஏறும் காரணத்தினாலோ, ப்ளீச்சிங், ஃபேஷியல்கள் தந்த பரிசாலோ... கன்னங்களில் சதை இளகித் தொங்குகிறதா... அதை மீண்டும் 'ஸ்டிஃப்' ஆக்க...
சர்க்கரை, வெள்ளரி விதை... இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து கன்னம், முகத்தில் ஒரே சீராகப் பூசுங்கள்.
50 மில்லி தேங்காய் எண்ணெயை நன்றாகக் காய்ச்சி... அதில் 25 கிராம் கஸ்தூரி மஞ்சள்தூள், 10 கிராம் விரலி மஞ்சள்தூள், சிறு துண்டுகளாக நறுக்கிய வெட்டிவேர் 10 சேர்த்து மூடி விடுங்கள். இந்தத் தைலத்தை தினமும் குளிப்பதற்கு முன் கன்னங்களில் மேலிருந்து கீழாக தேய்த்து மசாஜ் போல செய்துகொள்ளுங்கள்.
இப்படி செய்வதால், வறண்டு தொய்ந்த தோலில் எண்ணெய்ப் பசை ஏறி, கன்ன சதை இறுகும்.
சிலருக்கு தலையில் நீர் கோத்துக் கொண்டாலும், கன்னமும் முகமும் பெரிதாகக் காட்டும். இதற்கு கறிவேப்பிலை ஜூஸ், வாழைத்தண்டு, முள்ளங்கி இவற்றை வேக வைத்த தண்ணீர் போன்றவற்றை அருந்துவது அருமருந்து. அவை முகத்தில் உள்ள நீரை வற்றச்செய்து, முகத்துக்கு சீரான வடிவம் கொடுக்கும்!

No comments:

Post a Comment